Tuesday, December 6, 2011

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 3

« தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 2

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 1

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!

ஜெயா அரசே! பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!

« பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு வழங்கும், சலுகைகளை நிறுத்து! அவர்கள் மீது வரிகளைப்போடு!

« உலக வங்கியின் ஆணைக்கு அடிபணிந்து மக்கள் மீது கட்டணச் சுமைகளை ஏற்றும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

« மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணி திரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, October 8, 2011

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!

மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?

Sunday, September 25, 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

பரமக்குடியில் 7 பேர் படுகொலை
சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட இருவர் பாம்புக்கடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.

Thursday, September 22, 2011

சாதிவெறிப் பாசிசம் எதிர்ப்போம்!

சாதிவெறிப் பாசிசம் எதிர்ப்போம்!
 பழனிகுமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப்பாசிசமே!
 பார்ப்பனிய ஜெயாவே! உயர் சாதி ஆதிக்க வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு பரிந்து பேசாதே!
 துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்!
 தீண்டாமை கொடுமைகளை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், ஜனநாயக, சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Monday, September 5, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலைசெய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரைநிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம். இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

Thursday, September 1, 2011

தியாகிகள் தினம்

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

 தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையைத் தடுத்து நிறுத்து!

 தூக்கிலிடத் துடிக்கும் தமிழினத் துரோகி சோனியா, மன்மோகன் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

சமச்சீர்க் கல்விக்கான போராட்டத்தை தொடர்வோம்!

 பொதுப்பாடத்திட்டம் சமச்சீர்க் கல்வியின் ஒரு அம்சமே!

முழுமையான சமச்சீர்க் கல்விக்காகப் போராடுவோம்!

 தமிழக அரசு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ஏற்கப் போராடுவோம்!

 தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை முறியடிப்போம்!

 கல்வித் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை எதிர்ப்போம்!

 அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு!

 சமச்சீர்க் கல்வியை எதிர்க்கும் பன்னாட்டு, உள்நாட்டு கல்வி முதலாளிகளையும் மதவாதப் பிற்போக்கு சக்திகளையும் முறியடிப்போம்!

 புதிய காலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!

தேசிய ஜனநாயகக் கல்விக்காகப் போராடுவோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!

 புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுக்கும் விலையே ஊழல்!

 ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!
ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

 நிதிமூலதனத்திற்கும் தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்!

 ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!

 கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்!

 ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே!

 ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!

 ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, August 21, 2011

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று! இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

இந்திய அரசே!

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!


சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது.

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 07.06.2011 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை (காவல்துறையினரின் மெத்தனத்தின் காரணமாக) 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப் ஏரியிலிருந்து பிணமாகத்தான் மீட்க முடிந்தது. கைவிரல் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தை அறுத்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே ஏரியில் உடல் வீசப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது போன்றே இக்கொலை நடந்துள்ளது என பார்த்தவர்கள் அனைவரும் கூறுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

தமிழினவிரோத, புதியகாலனியதாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

14வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலை வரும் ஏப்ரல் 13ல் சந்திக்க இருக்கிறோம். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய ஒரு கூட்டணியும்; அ.தி.மு.க தலைமையில் தே.மு.தி.க, ‘இடது’சாரி கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும்; புதியதாக முளைத்துள்ள சாதிவாதக் கட்சிகள் இக்கூட்டணிகளில் சேர்ந்தும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னால், பாட்டாளிவர்க்கமும், பிற ஜனநாயக சக்திகளும் இத்தேர்தலில் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் இன்று நாடு முழுதும் நிலவுகின்ற சூழ்நிலைகளைப் பற்றி ஒரு ஆழமான பரிசீலனை செய்வது மிகவும் அவசியமாகும். நடக்க இருப்பது தமிழக சட்டமன்றத் தேர்தலேயானாலும், நாடு முழுவதற்குமான ஆய்வு அவசியம். ஏனெனில், சோனியா-மன்மோகன் கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் செயல்படுத்திவரும் அதேக் கொள்கைகளையே, கருணாநிதி தலைமையிலான தமிழ்மாநில ஆட்சியும் செயல்படுத்திவந்தது. மேலும் மத்திய அரசு கொள்கைகள்தான் மாநில அரசுகளின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன.