Thursday, April 30, 2015

மே நாள் வாழ்க! மே நாளில் நாம் சூளுரைக்க



மே நாள் வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரையும் கொடுத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளே இம் மே நாள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதுதான் இம்மேநாளின் இந்திய மக்களின் சர்வதேசிய, தேசிய கடமையாகும்.

சரிந்துவரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின், தனது தலைமையின் கீழ் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைக்கும் அமெரிக்காவின் கனவு தகர்ந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பொம்மை ஆட்சிகளை நிறுவுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது கட்டுப்பாட்டை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கவில்லை.

மே நாள் பொதுக்கூட்டம் திருச்சி


Friday, April 17, 2015

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை! ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை! 
 ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!

செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவின் அதிரடிப்படை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.
“சரண் அடையாததாலும், திருப்பி எங்களைத் தாக்கியதாலும் என்கவுண்ட்டர் நடத்தவேண்டிய சூழ்நிலை” என்று ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசாங்கமும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் பேருந்தில் பயணம் சென்றவர்களைக் கைது செய்து சித்தரவதை செய்துதான் கொன்றார்கள் என்பதை “தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல்கள், அடித்துத் துன்புறுத்திய காயங்கள்” என்று தமிழ்த் தொழிலாளர்கள் உடலில் இருந்த அத்தனை ரணங்களையும்” நேரடியான சாட்சிகளையும் கொண்டு தடய அறிவியல் அறிஞர்களும், ஆந்திரப்பிரதேச சிவில் உரிமை அமைப்புகளும் நிரூபித்துள்ளன. எனவே தமிழ்த் தொழிலாளர்கள் 20 பேர்களின் பச்சைப் படுகொலை சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்தான்” என்பது அம்பலப்பட்டுவிட்டது. 

20 தமிழ்த் தொழிலாளர்களைச் சந்திரபாபுநாயுடு அரசாங்கம் சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்ன?

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை செய்த ஆந்திர அரசின் “அரசு பயங்கரவாதத்தைக்” கண்டித்து...


Saturday, April 4, 2015

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

    காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கமும் அதற்குப் பின்னர் வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. அரசாங்கமும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்த்து இன்று நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் நிலங்களை கையகப் படுத்துவதற்காகக் கொண்டுவந்த சட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.

    பிரிட்டிஷ் காலனி அரசு 1894ல், நிலத்தைக் கையகப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின் படி, அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால், உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசுகொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான் நீதிமன்றத்துக்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே தவிர நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இந்தச் சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே பொதுநலன் என சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்களின் நிலங்களை 1894 சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகுமுதலாளிகளும் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்கள். வணிக நடவடிக்கைகள் மூலம் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்கள்.

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!