Monday, November 26, 2012

தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!

தருமபுரி அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.