Saturday, October 8, 2011

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!

மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?