Friday, February 10, 2012

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!



சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

அமெரிக்காவின் அடிமைச் சேவகன் மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை கடந்த நவம்பர் 24ஆம் தேதி எடுத்தது. பல்பொருள் விற்பனையில்51 சதவீதமும் (Multibrand retail), ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீதமும் (Single brand retail) அனுமதித்து, அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்கு மாபெரும் இந்தியச் சந்தையை திறந்துவிடும் துரோகத்தைச் செய்துள்ளது. சோனியாவும், வருங்காலப் பிரதமர் கனவில் மிதக்கின்ற ராகுல் காந்தியும் இந்தத் துரோகத்திற்கு ஆசி வழங்கியுள்ளனர். வணிகர்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 10ல் மன்மோகன் கும்பல் ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டது.