Sunday, March 18, 2012

ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் சோனியா மன்மோகன் கும்பலைக் கண்டித்து

அமெரிக்காவின் “ஜெனிவா தீர்மானம்இலங்கை மீதான மேலாதிக்க நோக்கம் கொண்டதே!

« இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலை கூண்டில் ஏற்றுவோம்!

« ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளிகளே!

« அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பேரால் இராஜபட்சேவுக்கு ஆதரவு அளிப்பது சிங்களப் பேரினவாதப் பாசிசத்தையே வலுப்படுத்தும்!

« ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கும்!

« சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிசத்திலிருந்து ஈழத்தமிழரை விடுதலை செய்யப் போராடுவோம்!

« தமிழீழப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்றப் போராடுவோம்!

« நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போராடுவோம்!

« தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றப் போராடுவோம்!

« வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து அதை ஈழத் தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

« சிங்களப் பேரினவாத பாசிசத்திற்கு எதிரான இலங்கை வாழ் இரு இனமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஜனநாயகத்தை நிலைநாட்டும்!

ஆர்ப்பாட்டம்

22.03.2012 வியாழன் மாலை 4 மணி

பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச், 2012

Thursday, March 15, 2012

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெருவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணைக்கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!

Thursday, March 1, 2012

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கை”களே!

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கைகளே!

« உலகமக்களுக்கு ஆபத்து அணு உலைகளால் மட்டுமல்ல! அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களால்தான் பேராபத்து!

« அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களை நிர்மூலமாக்கப் போராடுவோம்!

« அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் மின்னுற்பத்தியைப் பெருக்க அல்ல! நாட்டை அடிமைப்படுத்தவே!

« இந்திய அரசே! அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

« பாதுகாப்பற்ற பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை மூடு! பாதுகாப்பு அம்சங்கள் உள்ள புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை அனுமதி!

« உரியபாதுகாப்பு மற்றும் இழப்பீட்டை உத்தரவாதம் செய்து கூடங்குளம் அணு உலையைத் திற!

« நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்த காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்ப்போம்!

« ஏகாதிபத்தியங்களிடம் நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்ய மறுக்கும் புதியகாலனிய தாசன் மன்மோகன் கும்பலை எதிர்ப்போம்!

« நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அனல், புனல், காற்றாலை, அணு மின்சாரம் என அனைத்தும் தழுவிய “தேசிய மின்கொள்கை உருவாக்கப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச் 2012