Sunday, December 26, 2010

இந்துதுவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் தீர்ப்பை நிராகரிப்போம் இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிப்போம்!

இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிப்போம்!

* 'பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்ற தீர்ப்பு' இந்துமத நம்பிக்கையின் அடிப்படையிலானதே! அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது அல்ல!

* சேது சமுத்திர மணல் மேட்டை ராமன் பாலம் என்பதுபோல, பாபர் மசூதியை ராமன் பிறந்த இடம் என்பதும் இந்த. இந்து மத நம்பிக்கையிலானதே!

* காவிக் காடையர்கள் பாபர் மசூதியை இடித்ததைக் கண்டிக்காமல் மெளனம் சாதிக்கும் இந்தத் தீர்ப்பு' இந்துத்துவ பாசிசத்திற்கு சேவை செய்யும் தீர்ப்பே!

* பாபர் மசூதியை மூன்றாகப் பிரித்து வழங்குவது இந்து, இஸ்லாமிய, மத நல்லிணக்கத்தை கொண்டுவராது!

மத மோதல்களுக்கே வழிவகுக்கும்!
* மன்மோகன் அரசே மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட அனுமதி வழங்கு!

* மதச்சார்பற்ற மக்கள் ஜனநாயக குடியரசு ஒன்றே மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் உருவாக்கும்!
* மக்கள் ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்.
* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வாழ்க!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

=================================================

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஒக்ரோபர், 2010

Tuesday, September 7, 2010

ஒபாமா வெண்புறா அல்ல! பிணம் தின்னிக் கழுகே!

ஒபாமா வெண்புறா அல்ல!

பிணம் தின்னிக் கழுகே!

« அமெரிக்க ஏகாதிபத்தியமே!

ஈராக், ஆப்கனை விட்டு வெளியேறு!

« புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலே!

ஒபாமாவுக்கு சிவப்புக்கம்பள வரவேறு அளிக்காதே!

« இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிகாவுடன் செய்துகொண்ட துரோக ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

« கள்ளத்தனமாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் வெளியிடு!

« பாராளுமன்ற ஒப்புதல் இன்றி ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள அனுமதிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 184 ஐ ரத்துச் செய்!

« அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

« அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கப் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

செப்டம்பர் 2010

Saturday, September 4, 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும்

«
தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அனுமதி கேட்டது.

மேற்கண்ட "பொதுக்கூட்டம் நடந்தால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்றும், தற்போது உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்" என்று கூறி கூட்டம் நடத்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்துக்கு அனுமதிதர கோவை மாநகர காவல்துறை மறுத்து விட்டது. இவ்வாறு கருணாநிதி ஆட்சி கருத்துரிமையை மறுப்பது தனி ஒரு நிகழ்வல்ல.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கெதிரான எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்தகைய சுவரொட்டிகளை அச்சடிக்கவேண்டாம் என அச்சக உரிமையாளர்கள் பலருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தம் கண்டனத்தை தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விட்டது காவல்துறை.

அரங்க கூட்டங்களை நடத்த முயன்றவர்கள் கூட காவல்துறையினரால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. மாற்றுக் கருத்துக்களுக்கான இடத்தை மறுத்து திமுக அரசு போலீஸ் ராஜ்யத்தை நடத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக வாதிகளையும் ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுக்கும் அரசு அதிகாரிகளையும் பழிவாங்குகிறது.

ஏன் இந்த பாசிச ஒடுக்குமுறை?

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தினம்

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

« மன்மோகன் கும்பலின் புதிய காலனிய உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
« நிலச்சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
« தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!
« தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
« மாவோயிஸ்டுகள் மீதான போர் மக்கள் மீதான போரே, போரை நிறுத்து! பேச்சுவார்த்தை தொடங்கு! புரட்சியாளர் ஆசாத்திற்கு வீரவணக்கம்!
« அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருணாநிதி ஆட்சியின் பாசிசப் போக்கை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு

Wednesday, August 11, 2010

தொடர்வோம் சுதந்திரப் போரை!

ஆகஸ்ட் 15...
யாருக்குச் சுதந்திரம்?
« அணுவிபத்து இழப்பீடு மசோதா – ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்திய மக்களைப் பலிகொடுக்கவே!
«   பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் – அமெரிக்காவின் ஆதிக்க நலனுக்கே!
«  பசுமை வேட்டை’ – கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கவே!
«   பன்னாட்டுக் குழும விவசாயமும் மரபணுமாற்றத் தொழில்நுட்பமும் வேளாந்துறையை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தவே!
« சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி, எண்ணெய் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயிக்க உரிமை – விளைவு விலைவாசி ஏற்றம்! மக்களுக்கோ... பட்டினிச்சாவு!
இதுவா சுதந்திர அரசு?
தொடர்வோம் சுதந்திரப் போரை!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்மொழிக்கு எதிரான பாசிச தாக்குதல்


செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

“பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களிடம் வினியோகம் செய்தது. கோவை செம்மொழி மாநாட்டை எதிர்த்த இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக

-         ம.ஜ.இ.க வின் அமைப்பாளர் உள்ளிட்ட முன்னணியினர் கைது;
-         செம்மொழி மாநாடு நுழைவாயலில் பிரசுரத்தை வினியோகம் செய்த ஞானம் உள்ளிட்ட ஐவர் மீது கொலைவெறித் தாக்குதல்;
-         சென்னையில் ம.ஜ.இ.க தலைமை அலுவலகம் சூறையாடல்;
-         சுவரொட்டியை அச்சிட்ட அச்சகத்தினர் மீது வழக்கு;
-         கோவையில் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்த ம.ஜ.இ.க வினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டுச் சொந்தக்காரருக்கு மிரட்டல்;
-         செம்மொழி மாநாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது;
-         பழ கருப்பையா மீதும் தாக்குதல்;
-         தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது;

இவ்வாறு செம்மொழி மாநாட்டை விமர்சிக்கும் உரிமையை பறிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இந்தத் தாக்குதல் பாசிசத் தன்மை கொண்ட கொடூர தாக்குதலாகும்.

            எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி ஆட்சி, ஆங்கிலம் இந்தி மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக ஆக்கக் கோரியும் குரல்கொடுத்தோர் மீது மூர்கத்தனமாக தாக்குதல் தொடுத்தது ஏன்?

-         இந்தி அல்லது ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த தேசிய மொழியையும் அங்கீகரிக்க, வளர்த்தெடுக்க மத்திய அரசு தயாராயில்லை. இதை எதிர்த்துப் போராட கருணாநிதியின் தமிழக அரசு தயாராயில்லை.
-         மத்தியில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற இலட்சியங்களையெல்லாம் கருணாநிதியும் திராவிட இயக்கக் கட்சிகளும் இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
-         இப்போது கருணாநிதிக்கு உள்ள அக்கறை எல்லாம் மத்திய அமைச்சரவையில் வலுவான துறைகளைக் கைப்பற்றுவது எப்படி? வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பவைதான். இந்த சந்தர்ப்பவாத அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் அரசியல்தான் தமிழக அரசு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை வழி நடத்தும் அரசியல். எனவே செம்மொழி மாநாட்டை விமர்சிப்பது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தி, அவரைத் தமிழர்களிடமிருந்து தனிமைப் படுத்திவிடும் எனக் கருதியே கருணாநிதியின் அரசு செம்மொழி மாநாட்டை எதிர்ப்போர் மீது இந்த தாக்குதலைத் தொடுத்தது.

செம்மொழி மாநாடு கருணாநிதியின் உட்கிடக்கையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

            உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பழந்தமிழ்ப் பெருமைப் பேசி தமிழ் மக்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஆனால் இன்றைய தமிழின் அவலத்தை அதாவது கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் (ஆங்கில, இந்தி மொழிகளின் ஆதிக்கம் தொடர்ந்தால்) செத்தமொழிப் பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக்கூடும் என்ற அபாயத்தை செம்மொழி மாநாட்டால் மறைக்க முடியவில்லை.

            ஈழத் தமிழ் மக்களின் மீதான இன ஒழிப்புப் போர் முடிவுக்கு வந்த பிறகும், ராஜபட்சே அரசு இன ஒழிப்பு பாசிச நடவடிக்கைகள் மூலம் தொடர்கிறது. ராஜபட்சே அரசின் பாசிச தாக்குதலை எதிர்ப்பதற்கு மாறாக, மன்மோகன்சிங் அரசு அத்துடன் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குரல் கொடுக்காதது செம்மொழி மாநாட்டின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது.

            இந்த செம்மொழி மாநாட்டின் மூலம் தனக்கு ஆதரவாக மக்களை திரட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் உட்கிடக்கை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த மாநாட்டின் ஆரவார ஆட்டங்களைக் கண்டு தமிழர்கள் ஏமாறப் போவதில்லை.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! பாவேந்தர்

            ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த போதே, இந்தியாவிலுள்ள மொழிகள் எல்லாம் மடிந்துபோய் அவற்றின் இடத்தில் ஆங்கிலம் நிலவிவருமென கருத்து இருந்துவந்தது. படிப்படியாக மெல்ல மெல்ல தமிழ்மொழி இனி செத்துப் போகும். ஐரோப்பிய மொழிகள் இந்த உலகில் உயர்வினை அடையும் என்ற கருத்து இருந்து வந்தது.

“எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்துவிடக் கூடியதன்று” என்று நம்பிக்கொண்டிருந்தனர் இந்திய தேசியவாதிகள். ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போன பிறகும் கூட, இந்தியா அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாடான பிறகும் கூட, இந்திய அரசு கடைபிடித்து வந்த தேசிய இன ஒடுக்குமுறைகளாலும், அது கடைபிடித்து வந்த ஆட்சி மொழிக் கொள்கையாலும், ‘எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்து விடக்கூடியதன்று’ என்ற நம்பிக்கை வளர்வதற்கு மாறாக, தேய்ந்து கொண்டே வந்துள்ளது.

இந்திய அரசின் ஆட்சிமொழி, பயிற்று மொழிக் கொள்கையின் விளைவாக இன்று ஆங்கிலம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மிகப் பெறும் அச்சுறுத்தலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சிமொழியாக இருக்கின்றன. இன்று அரசின் அனைத்து துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. உயர்நீதி மன்றங்களில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வழக்காட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 348வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. இச் சூழலை மாற்றாமல் ஆங்கிலத்தை அகற்றாமல் தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக மாற்ற முடியாது.

இந்திய அரசு கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிப்பதை எதிர்த்துப் போரிடுவதற்கு பதிலாக மாநில தரகு முதலாளியக் கட்சிகளும் திரவிடக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என வலியுறுத்தின. திராவிடக் கட்சிகள் தமிழை ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சி செய்யவில்லை; மாறாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகவே இக்கட்சிகள் பாடுபட்டன. இதன் விளைவாக மத்திய ஆட்சிமொழியாக தமிழில்லை, மாநிலத்திலும் முழுமையான நிர்வாக மொழியாக இல்லை. நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக இல்லை. பயிற்றுமொழியாக தமிழ் இல்லாமல் போகும் அபாயம் எங்கும் எதிலும் ஆங்கிலம் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழ்மொழிக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்படியே சென்றால், கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் செத்தமொழி பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக் கூடிய அபாயம் இருக்கிறது.

மேலும், யுனெஸ்கோ நிறுவனம் செய்த ஆய்வின்படி 21ஆம் நூற்றாண்டு இறுதியில் உலகில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்று என்ற செய்தி வந்துள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் விளைவாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகுவாக பரவிவருவதன் தொடர்ச்சியாக இம்மொழிகளின் அழிவை நாம் காணவேண்டும்.

தமிழ்மொழி செம்மொழி என்று அறிவித்து விடுவதால் தமிழ் வழக்கொழிந்த மொழியாக ஆவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. தமிழ் எல்லாத் துறைகளிலும் மக்களின் பயன்பாட்டு மொழியாக ஆக வேண்டும்; எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெற செய்தல்வேண்டும். அதாவது, தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிப்பாட்டு மொழியாக ஆக்குவதன் மூலம்தான் தமிழ்மொழி வாழ்வியல் மொழியாக, வளரும் மொழியாக நிலைநின்று மங்காப் புகழ்பெற்ற மொழியாக ஆக்கமுடியும்.

இப்பணியை, ஏகாதிபத்திய உலகமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவராமலும், இன்று நாட்டில் நிலவும் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆட்சி அமைப்புக்குள்ளேயே சாதித்துவிட இயலாது. எனவே இப்பணியை நிறைவேற்ற இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசை நிறுவ உறுதிகொள்வோம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் வெற்றிபெற மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்!

       புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க கருணாநிதி அரசு போடும் பொய் வழக்குகளை முறியடிக்க தாராளமாக நிதி தாரீர்!

புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்:
« தமிழ்மொழியை செம்மொழி என அறிவித்துவிடுவதால் தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!
« தமிழ்மொழியை ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி ஆக்கிட மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
« உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜூலை, 2010

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!


பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!
            நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவரை நடத்தப்பெற்று வந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து வேறுபட்டது. உலகத் தமிழ்பேசும் மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்குள் இறங்காமல் தப்பிக்கும் பொருட்டு கலைஞர் கருணாநிதி இம்மாநாட்டை உலகச் செம்மொழி மாநாடாக நடத்த விரும்புகிறார்.
            பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்து, தமிழர் அனைவரும் நூற்றாண்டுக்குமேல் நடத்தி வந்த போராட்டத்தின் விளைவாக 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்தது. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கொண்ட உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டுவிட்டது.
            செம்மொழி என்றாலே அது வாழும் மொழி, வளரும் மொழி, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆட்சி மொழி என்று பொருள் அல்ல. தமிழ் மொழியை போன்று அடிமைப்பட்டிருக்கும் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிப்பதால் அது விடுதலை பெற்றமொழி ஆகிவிடாது.
            இச்செம்மொழிகளுள் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மூன்றும் இறந்தமொழிஎன்பதற்கு எடுத்துக்காட்டு. கிரேக்கம், இலத்தீன் ஆகிய இருமொழிகளுமே வழக்கிறந்ததற்கு அரசியல் முக்கிய காரணம்.
            கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால் கிரேக்க மொழியும் அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப்பேரரசின் அழிவுக்குப்பின் பலதேசங்கள் விடுதலைபெற்றதால், இலத்தீன் செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் மொழி அழிந்தது.
            ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.
            தொன்மையான மொழிகள் என்பவை சொல்திறனும் வளமும் சமுதாய வாழ்க்கை முறையில் செயலற்று நிற்பதாலேயே அவை வழக்கிறந்து நிற்கின்றன. தமிழில் இறந்த மொழி எனக் கூறுதல் மரபு அன்று. ஆகையால் வழக்கு அழிந்த மொழிஎன்று குறிப்பிடுவர்.
தமிழின் வாழும் தன்மையை,
ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா நின்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமேஎனத் தமிழை வாழ்த்தினார், சுந்திரம்பிள்ளை அவர்கள்.
            மொழி என்பது மக்கள் தொடர்புக்காக ஏற்பட்டது. சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத போது அது இறந்ததாகக் கருதப்படுகிறது.
            சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை, வரலாறு, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மொழி பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சி இலக்கியத்துறையை மட்டும் சார்ந்ததாகாது. மொழி ஆக்கம் தரவேண்டுமானால், சில காலம் தேங்கிய இடைவெளிக்குப் பிறகு அதனை முன்னேறச் செய்யவேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெறச் செய்தல் வேண்டும்.
            தமிழ் செம்மொழி என அறிவித்திருந்தாலும், இந்தியாவின் தரகுப் பெருமுதலாளித்துவ பெருநிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசு ஆங்கிலத்தையும் இந்தியையும் திணித்து எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழியையும் அடக்குகிறது.
            இத்தகைய சூழ்நிலையில் செம்மொழி மாநாடு பற்றி தமிழாய்வாளரான மா.இலா.தங்கப்பா பின்வருமாறு கூறுவது மனங்கொள்ளத்தக்கது:
            தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு உழலுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரை பல்லாண்டு காலமாய்ப் பிணித்துள்ள ஒரு நோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
அந்நிய ஆதிக்கமும் ஆட்சிமொழியும்:
            தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.
            1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.
            தமிழன் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையில் தமிழீழம் உள்ளது, மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். 18ஆம் நூற்றாண்டு தொடங்கி உலகமெங்கும் பிழைப்பதற்காகப் போன தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை துயரமானது. இன்று இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைப் பேச அறியாது உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்வுக்குறியது.
            இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் இந்தியா போன்ற ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் புதியகாலனிய ஆதிக்கம் என்ற வடிவில் மறைமுகமாகத் தொடர்ந்து இருக்கிறது.
            இத்தகைய புதியகாலனிய ஆதிக்கம், மொழியிலும் காணப்படுகிறது. இந்தநாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்தச் சார்பு நாடுகளிலிருந்து அபகரிப்பதை இன்றளவும் காண்கிறோம். இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாகவோ அதிகாரப்பூர்வமற்ற ஆட்சிமொழியாகவோ முதன்மொழியாகவோ சமூகக் கௌரவமிக்க மொழியாகவோ ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது மொழிவழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கம். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம் செய்கிறது.
            1802 முதல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற விதத்தில் இந்தியப் பகுதிகள் அனைத்தும் நிர்வாக, அரசியல், இராணுவ, பொருளாதார நிலைகளில் வலுக்கட்டாயமாகவும் வன்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. இது ஏகாதிபத்திய நலன்களுக்கான அனைத்திந்திய உருவாக்கமாகும். இதற்கு ஒற்றை அரசாங்க வடிவமும் (Unitary State) மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் தேவைப்பட்டன. அனைத்து தேசிய இனங்களும் சம உரிமையைப் பெறாத அனைத்திந்தியப் போக்கு, தேசிய இனங்களின் மொழிகள் ஆட்சி மொழியாவதற்கும் பயிற்று மொழியாவதற்கும் பெரும் தடையாக உள்ளது.
            இந்த அனைத்திந்தியப் போக்கு என்பது உள்நாட்டில் இந்தி மொழிக்கான மேலாதிக்கத்துடன் வெளிப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இந்தி மொழிக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பலவழிகளில் தேசிய இன மொழிகளுக்குரிய சமத்தகுதி அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்திந்தியப் போக்கின் வெளிப்பாடு.
            நமக்குத் தேவை தேசிய இனங்களின் சமத்தகுதியும், சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட அனைத்திந்தியத் தன்மையாகும். இத்தகைய அமைப்பில் அந்நிய மொழியின் மேலாதிக்கம் ஒரு தேசிய இனத்தின் மீது இராது.
தாய்மொழிதான் என்றும் நம் ஆட்சிமொழி
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, இங்கு ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்புமொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சிமொழியாக இருக்கின்றன.
            இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப்படவில்லை. அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலை சரிதானா?
            இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில்; உயர் கல்வியும் ஆங்கிலத்தில்; ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் - ஆங்கிலத்தை அகற்றாமல் - தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சிமொழியாக பயிற்றுமொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.
புதியகாலனியும் பயிற்று மொழியும்
            தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
            19.07.1854ல் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய சார்லசு உட் குழுவின் நவீனக் கல்வியின் நோக்கங்களாகவும், பயிற்று மொழி முறைகளாகவும் எழுதிய பரிந்துரைகளில், ஏகாதிபத்திய நலனும் ஆங்கில மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளன. இன்றைய கல்வியிலும் இவை தொடர்கின்றன.
            பயிற்றுமொழி என்பது கல்வியைக் கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காண வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்தி முறைக்கு ஏற்பவே நம் கல்வியின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும் இப்பொழுது அறிவிக்கப்பட்ட புதிய தொழில் கொள்கையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இது புதியகாலனிய முறை தொடர்வதையே நமக்குக் காட்டுகிறது. இத்தகைய உற்பத்திமுறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலை வரை அமைக்கப்பட்டுள்ளது.
            இத்தகைய உற்பத்தி முறைக்குச் சார்பான கல்வியின் சாராம்சம்: கொடுக்கப்படும் கல்வி ஏகாதிபத்தியச் சார்பானது; பரந்து பட்ட இந்திய மக்களுக்கானதாக இல்லை. இத்தகைய கல்வியின் பயிற்றுமொழி அந்நிய மொழியின் ஆதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்று மொழியின் ஆணிவேர் ஏகாதிபத்தியச் சார்புத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தக் கல்வியின் பயிற்றுமொழி இந்திய மக்கள்விரோத உள்ளடக்கத்தின் வெளிப்பாடு.
            கல்வியின் ஏகாதிபத்தியச் சார்பு உள்ளடக்கத்தை, தாய்மொழியை பயிற்றுமொழியாக ஆக்குவதற்குத் தடையாகக் கருதாமல் பயிற்றுமொழி என்ற வடிவத்தை மட்டுமே மாற்றக் கோருதல், உள்ளடக்கத்தைப் புறக்கணித்துவிட்டு வடிவத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் நோக்கமற்ற விதத்திலும் ஒரு தேசிய மொழியைப் பயிற்றுமொழியாக்கிவிட இயலும் என்ற தவறான அரசியல் நம்பிக்கையை ஊட்டுவதற்கு துணைபோவதாகும்.
தாய்மொழிக் கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை
            நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கப்பூர்வமான அறிவு கிட்டும். அந்நியமொழிக் கல்வி சுமைமிக்கது. மேலும் மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.
            முன்பு வேதங்களை பார்ப்பனர்களின் ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல் அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப் பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நியமொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
            ஆங்கிலம்தான் பயிற்றுமொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன.
            தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.
            கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.
            தமிழை முழுமையாக ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.
செம்மொழி மாநாடு
            தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கவும் பயிற்றுமொழியாக்கவும் போராடக் கிளர்ந்தெழும் மக்களைத் திசை திருப்புவது இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கங்களில் ஒன்று.
            தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி தங்கள் கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துரைத்துப் போராடினார்கள் தமிழ் மக்கள். ஆயினும் சிங்களப் பேரினவாத பவுத்த மதவாத இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்வதற்கு மாறாக, ஆயுதம் கொடுத்தும், பண உதவி செய்தும், போரில் மறைமுகமாகப் பங்குகொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டைவேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவுகொடுத்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார். இந்தத் துரோகத்தை மறைத்தல் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கு மற்றொரு நோக்கமாகும்.
பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே
            வேறுவிதமாகச் சொன்னால், பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு. இதுதான் கலைஞர் கருணாநிதியின் தந்திரம் சுந்திரம்பிள்ளை, பரிதாமாற்கலைஞர் ஆகியோர் இவருக்கு வழிகாட்டிகள்.
            ஆரியம் வழக்கொழிந்து போகத் தமிழ் இளமை மாறாதிருப்பதகாக் கூறிச் செல்கிறார் சுந்தரம்பிள்ளை அவர்கள். இது பின்னோக்கிப் பார்த்து பழமை பேசும் செயலாகும். சென்ற காலத்தின் சிறப்புப் பற்றிய குரல் இது. அதே தமிழ் மொழி தனது காலத்தில் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதைக் காணவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதைப் பற்றியும் கவலையில்லை. தமது காலத்து விவகாரங்களில் வெள்ளைக்கார ஆட்சியையும் சமஸ்தான மன்னராட்சியையும் சுந்தரம்பிள்ளை ஏற்றுக்கொண்டார். நிலவிய அரசியல் வரம்பிற்குள் மொழி, இலக்கியம் முதலியவற்றை பேணுவதே இலட்சியமாகக் கொண்டார்.
            கலைஞர் கருணாநிதி அவர்களும் பழந்தமிழ்ப் பெருமை பேசுகிறார். ஆனால் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, குறிப்பாகத் தமிழ்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவது, பயிற்றுமொழியாக்குவது ஆகியவற்றிற்கான போராட்டத்தைக் கைவிட்டு எங்கும் எதிலும் ஆங்கிலமயப்படுத்துகிறார்.
            சுந்தரம்பிள்ளை போன்றோர் மீது பாரதி வைத்த விமர்சனம் கலைஞருக்கும் பொருந்தும்.
மறைவாகத் தமக்குள் பழங்கதைகள்
சொல்வதிலோர் மகமை இல்லை
அதுமட்டுமல்ல. முக்காலத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறார்.
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்திலார்
பேடிக்கல்வி பயின்றுழப் பித்தர்கள்
            கலைஞர் கருணாநிதி, மூண்டிருக்கும் இந்நாளின் நிகழ்ச்சியை நன்கறிந்தவர்தான். ஆனால் கண்முன் கண்ட நிகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் விமோசனம் தேடுவதற்குப் பதிலாக அகில இந்திய தரகுமுதலாளித்துவத்துடன் சமரசப் பாதையைப் பின்பற்றுகிறார். எனவே பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழரின் அவலத்தை மறைக்க செம்மொழி மாநாடு கூட்டுகிறார்.
தேசிய இன விடுதலைக்கு புரட்சிகர ஜனநாயக மக்கள் இயக்கம் தேவை
            காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச் சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான் புதியகாலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.
            சீனமும் செம்மொழிப் பட்டியலில் இருந்தது. அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும் சீனமொழி உள்ளிட்ட 56 தேசிய இன மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தன.
            தமிழ் செம்மொழிப் பட்டியலில் இருந்தாலும் இந்தியத் தரகுப்பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு எல்லாத் தேசிய இனங்களின் மீதும் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறது; எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ்மொழி ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு நிறுவப்படவேண்டும்.
            இப்பணியை நிறைவேற்றப் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர ஜனநாயக இயக்கம் தேவை. எனவே, அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பது நமது உடனடிப்பணியாகும்.
புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் பின் அணிதிரள்வோம்.
« அரைக்காலனிய-அரைநிலபிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது !
« தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும்,
  ஆட்சி மொழியாய்,                               
  பயிற்று மொழியாய்,                            
  வழிபாட்டு மொழியாய்
அன்னைத் தமிழை அரியணையேற்றவும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
« ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்துவிடாது!
« உலகத்தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!!
ஜூன் 2010

Tuesday, April 20, 2010

மே நாள் வாழ்க!


மே நாள் வாழ்க!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியானது தீர்வுகாணமுடியாமல் நீடித்து வருகிறது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குஏகாதிபத்தியவாதிகளையும்அவர்களின் தாசர்களையும் தூக்கியெறிந்து உலகப் பாட்டாளிகளும்ஒடுக்கப்பட்ட தேசங்களும் சோசலிசப் புரட்சிக்கும் தேசிய விடுதலைப் புரட்சிக்கும் போர்பரணி பாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே இம் மே நாள்.
அமெரிக்காவின் உலகமேலாதிக்கம்:
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது உலகமேலாதிக்கத்திற்காக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர்களை வெறித்தனமாகத் தொடர்கிறது. யுத்தவெறியன் ஜார்ஜ் புஷ்ஷிற்கு மாற்றாக உலக சமாதானம் பேசிய வெண்புறா ஒபாமாவின் ஆட்சி ஆப்கானிஸ்தானுக்கு 30,000 துருப்புக்களை கூடுதலாக அனுப்பி ஒரு கொடூரமான யுத்தத்தை தொடர்கிறது. ஈரான் மீது பொருளாதாரத்தடை விதித்து அந்நாட்டை முற்றுகையிடுவதுஹைத்தி உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் நேரடியாக தலையிடுவது என அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடர்கிறது.
2007ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவால் மீளமுடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பதன் மூலமும்ஆயுதப் போட்டியை உருவாக்குவதன் மூலமும் தமது நாட்டில் காப்புக் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்கிறது. மேலும் கச்சாப் பொருட்களை சூறையாடவும் மூலதன ஏற்றுமதி மற்றும் மலிவானக் கூலி உழைப்பைக் கொள்ளையடிப்பதற்காக இந்தியா போன்ற நாடுகளின் மீது இருதரப்பு உடன்படிக்கை மூலம் புதியகாலனி ஆதிக்கத்தை திணித்துவருகிறது.
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மன்மோகன் கும்பல்:
மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல்அமெரிக்க-இந்திய உறவுகளில் ஒரு ‘புதிய சகாப்தம்’ படைக்கப் போகிறோம் என்று கூறிநாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “புதிய காலனியாக மாற்றி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மன்மோகன் கும்பல் அமெரிக்காவுடன் இராணுவஅணுசக்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இருதரப்பு உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி செய்துகொண்டது. இதன் மூலம் நாட்டின் அரைகுறை சுதந்திரத்தையும் ஒழித்துநாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் துரோகச்செயலைமான வெட்கமின்றி செயல்படுத்துகிறது.
மன்மோகன்-சோனியா கும்பல் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்தவுடன்அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் கட்டுப்பாடற்று கடிவாளம் இல்லாத குதிரைப்போல் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவிடமிருந்து பெறுகின்ற தளவாடங்களின் பயன்பாடுகளை கண்காணிப்பதற்காக இருநாடுகளைச் சார்ந்த நிபுணர்குழுவை உருவாக்குவதுபோர் ஆயுதங்களையும் மற்றும் ரூ.50,000 கோடிக்கான 126 போர்விமானங்களையும் அமெரிக்காவிடமே வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்அமெரிக்கா எடுத்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மீதான போர்த்தந்திரத்திற்கு இந்தியாவை இணங்கச் செய்வதுஅமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் அணுஉலை அமைக்கும் போது அதில் விபத்து ஏற்பட்டால் அமெரிக்க கம்பனிகள் பொறுப்பேற்பதிலிருந்து விலக்கு அளிப்பதுகுறைந்த இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து சட்டம் இயற்றுதல் போன்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு மன்மோகன் கும்பல் பணிந்து போகிறது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு துணைபோகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மன்மோகனை உலகின் தலைசிறந்த “இராஜதந்திரி” என்று பாராட்டுவதன் மர்மம் என்னஇந்தியாவை அமெரிக்காவின் ஒரு அடியாளாக மாற்றியமைக்கும் துரோகத்திற்கு அளிக்கும் பரிசுதான் இந்தப் பட்டமும்பாராட்டும்.
அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் பொதுத்துறை-தனியார் பங்கேற்பு (public-private participation) எனும் பெயரில் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு திறந்துவிடுகிறது. அமெரிக்காவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசுடமையாக்குதல்அரசின் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும்போதுமன்மோகன் கும்பலோ அனைத்துத் துறைகளையும் அன்னிய மூலதனத்திற்கு திறந்துவிடுகிறது.
நவரத்தனா என்றழைக்கப்படும் இந்திய எஃகு குழுமம்ஆயில் இந்தியாஇயற்கை எரிவாயு நிறுவனம்நிலக்கரி சுரங்கங்கள் போன்ற இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.40,000 கோடிக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டது. அண்மையில் எஃகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.16,000 கோடிக்கு விற்க மத்திய மந்திரிசபை முடிவெடுத்துள்ளது.
மேலும் ஆயுள் காப்பீடுவங்கிகள் போன்ற நிதித்துறைகளில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் திவாலாகிப் போன நிதிநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. பன்னாட்டு வங்கிகளும்டாட்டாபிர்லாரிலையன்ஸ் போன்ற உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் வங்கித் துறையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் முழுவதையும் அமெரிக்க நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு மன்மோகன் கும்பல் தொழிற்துறை மற்றும் நிதித்துறைகளை அன்னிய நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்படுத்திவிட்டு அவர்களின் இலாபத்தை பன்மடங்கு பெருக்குவதற்குதொழிலாளிவர்க்கத்தின் மீது ஒரு கொடியத் தாக்குதலைத் துவங்கிவிட்டது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டியடிப்பதுஒப்பந்த முறைகள் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை பரவலாக்குவது, 8 மணி நேர வேலைநாளை 12 மணி நேர வேலை நாளாக உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு இதுநாள்வரை இருந்துவந்த அரைகுறையான தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
வேளாண்மைத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் “முடிவில்லா பசுமைப் புரட்சி” எனும் பேரில் இந்திய வேளாண் துறையை அமெரிக்காவின் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் வேளாண் துறையில் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை கள்ளத் தனமாக ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண்மையில் இலாபமீட்டாத நிலங்களை அமெரிக்க கம்பெனிகளிடம் ஒப்படைப்பதுமரபணு மாற்று மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் மான்சாண்டோ கார்கில் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளை அனுமதிப்பதுஇதை எதிர்த்த மக்கள் இயக்கத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது என அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாக நிலச் சீர்திருத்தம் செய்ய மறுத்து அரைநிலவுடமையை பாதுகாத்துவருகிறது. தற்போது இந்திய அரசு நில உச்சவரம்பு சட்டங்களையும் மீறி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்க பன்னாட்டு வேளாண் கம்பெனிகளும்உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவக் கும்பல்களும் குவித்துக்கொள்ள துரோக ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
ஏற்கனவே இந்திய அரசு வேளாண் துறையில் புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலமும்தொழில் மயமாக்கம் என்ற பெயரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரிலும் லட்சக் கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களை விவசாயிகளை விரட்டியடித்துவிட்டு கைப்பற்றியுள்ளனர். 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு 300க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு 1,40,000 ஹெக்டர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது.
வேளாண் விளை நிலங்கள் அமெரிக்க வேளாண் கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதோடுமரபணு மாற்று விதைகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியையும் அவைகளிடம் ஒப்படைக்கிறது. இதன் மூலம் மரபணுமாற்று மலட்டு விதைகளை உற்பத்தி செய்வதோடுஅதை இங்கேயே பயிர் செய்து இந்தியாவில் இத்தகைய வேளாண் பொருட்களை விற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்று விதைகளை எதிர்த்து விவசாயிகளும்மக்களும்போராடுவதை ஒடுக்குவதற்கு மன்மோகன் கும்பல் உயர் தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற ஒரு பாசிச சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. இச்சட்டத்தின்படி சரியான ஆதாரம் அல்லது விஞ்ஞான ஆய்வின்படி அல்லாமல் மரபணு மாற்று விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும்ரூ.இலட்சம் அபராதமும் விதிக்கப்படும். தகவலறியும் சட்டப்படி மரபணுமாற்ற ஆராய்ச்சி அனுமதி பற்றிய உண்மைகளை அறிவதற்கும் இச்சட்டம் தடைவிதிக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் அடக்குமுறை சட்டத்தின் மூலம் மரபுசார் விவசாயத்தையும்சுயசார்பு விவசாயத்தையும் அழித்து அமெரிக்காவின் மான்சாண்டோகார்கில் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது.
இத்துடன் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்வேளாண்துறைக் கடன் ஒதுக்கீட்டை அதிகரித்து ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக மன்மோகன் கும்பல் விவசாயிகளின் நண்பனைப் போல நடிக்கிறது. ஆனால் இந்த கடன் யாருக்கு பயன்படப் போகிறதுவிவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருட்களை வாங்கி விற்கும் வேளாண் வணிக நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கவும்போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கவே இந்தக் கடன் வழங்கப்பட இருக்கிறது. பன்னாட்டுஉள்நாட்டு வேளாண் வணிக நிறுவனங்களான கார்கில்மிஜிசிடாட்டாகோத்ரஜ்நீல்கிரீஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கே விவசாயக் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கோ கந்துவட்டியும்தற்கொலைகளுமே பரிசாகக் கிடைக்கும்.
மன்மோகன் கும்பல்வேளாண் விளைநிலங்களை மட்டும் பன்னாட்டுஉள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு வழங்கவில்லை. காடுகள் மற்றும் மலைப் பகுதியில் வாழுகின்ற பழங்குடி மக்களின் நிலங்களையும் பறித்து பன்னாட்டுஉள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகிறது. தண்டகாரண்யா என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசம்சத்தீஸ்கர்மேற்குவங்கம்ஒரிசாஆந்திரம்மகாராஷ்டிரா வரை பரந்து விரிந்துள்ள பகுதிகள் பழங்குடி மக்களின் தாயகமாக விளங்கி வருகிறது. தற்போது இப்பகுதி மிட்டல்ஜிண்டால்டாட்டாஎஸ்.ஆர்போஸ்கோவேதாந்தா போன்ற கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாறிவிட்டது. 5 கோடி மலைவாழ் மக்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு பழங்குடி மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதற்கானக் காரணம் என்ன?
இப்பகுதியில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்ற கனிமவளங்களை கைப்பற்றுவதுதான் உண்மையானக் காரணம் ஆகும். ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட்டின் மதிப்பு சுமார் ரூ.200 லட்சம் கோடியாகும்அத்துடன் சதீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் கிடைக்கும் தங்கம்வைரம்யுரேனியம் போன்ற 28 வகையான கனிம வளங்களை அளவிடவே முடியாது. மேலும் இப்பிரதேசத்தில் இரும்பு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைப்பதுஅணைகள்நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் என இப்பிராந்தியம் முழுதும் பன்னாட்டுஉள்நாட்டு முதலாளிகள் மூல வளங்களைக் கைப்பற்ற வெறிபிடித்து அலைகின்றன.
இந்திய அரசோ “காட்டு வேட்டை” எனும் பெயரில் பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்து இக் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அம்மக்களின் மீது ஒரு கொடிய யுத்தத்தை தொடுத்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது எனும் பெயரில் பழங்குடிமக்களின் மீது அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுள்ள 5 கோடி பழங்குடி மக்களின் மறுவாழ்வு பற்றி மன்மோகன் கும்பல் வாய்திறக்க மறுக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறையையும் அமெரிக்காவிற்கு திறந்துவிட்டு புதியகாலனியத்திற்கு சேவைசெய்கிறது.
சமூக நலத்திட்டங்களுக்கு நிதி குறைப்பு:
இந்திய அரசு நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாகக் (நிஞிறி) குறைப்பது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் மன்மோகன் கும்பலோ நிதிப்பற்றாக்குறையை குறைப்பதாகக் கூறிக்கொண்டேபன்னாட்டுஉள்நாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடியிலிருந்து மீட்பது எனும் பெயரில்நிதி நிலை அறிக்கையில் ரூ.லட்சம் கோடி வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில் கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரி விதிப்பில் ரூ.80,000 கோடி ஆளும் வர்க்கங்களுக்கு வரிச்சலுகை வழங்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிகளைக் காரணம்காட்டி கலால்வரிசுங்கவரி குறைப்பு மூலமும்ஊக்கத்தொகைநட்ட ஈடுகளை தொடர்வதன் மூலமும் சுமார் 4,91,000 கோடியை மன்மோகன் கும்பல் வாரிவழங்கியுள்ளது.
மறுபுறம் உணவுக்கான மானியத்தை வெட்டுவதுபெட்ரோல் விலைகளை உயர்த்துவதுகல்விமருத்துவம்சுகாதாரம் போன்ற மக்கள் நலன்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்து நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகிறது. கல்விமருத்துவம்சுகாதாரம் போன்றத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு இவைகளை தனியார்மயமாக்கி பன்னாட்டுஉள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி வருகிறது. மன்மோகன் அரசு உயர்கல்வியில் பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களை நேரடியாக அனுமதிக்க சட்டம் இயற்ற இருக்கிறது. இதன் விளைவாக ஏழைகளுக்கு உயர்க்கல்வி ஒரு கனவாகக்கூட இருக்கமுடியாது. மேலும் அனைவருக்கும் கல்வி என்ற சட்டத்தை மன்மோகன் அரசு கொண்டுவந்துவிட்டதாக கூறிக்கொள்கிறது. ஆனால் ஆரம்பக் கல்வியில் தனியார் பள்ளிகளை அனுமதித்துவிட்டுமாவட்ட ஆரம்பக்கல்வி திட்டத்தை உலகவங்கியிடம் ஒப்படைத்துவிட்டுபள்ளியைவிட்டு இடையில் நின்றுவிடும் (dropouts) குழந்தை உழைப்பிற்கு காரணமான அரைநிலவுடைமை முறைகளுக்கு முடிவுகட்டாமல் அனைவருக்கும் கல்வி என்று பேசுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். மருத்துவமும்சுகாதாரமும் இதே நிலைமைத்தான்.
மாநில உரிமை பறிக்கப்படுதல்:
மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அரசு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதேச்சதிகாரமான முறையில் செயல்படுத்துகிறது. விவசாயம்கல்விமருத்துவம்சுகாதாரம் போன்ற மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறைகளையும் தன்விரும்பம்போல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கிறது. மாநில அரசுகளின் அரைகுறையான தன்னாட்சி உரிமைகளையும் பறித்து அனைத்து அதிகாரமும் வாஷிங்டன்னிடம் ஒப்படைக்கிறது. மாநில சுயாட்சி பேசும் கருணாநிதியோ மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை எதிர்க்கத் தயாரில்லை. மாறாக கருணாநிதி அரசாங்கமே புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதற்கு போட்டி போடுகிறது. தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றிவருகிறது.
மன்மோகன்-சோனியாக் கும்பல் தெலுங்கானாப் போராட்டத்திற்கு பிறகு நாடு முழுதும் மொழிவழி மாநிலங்களை பிளவுபடுத்தும் கோரிக்கைகளை பரிசீலிக்க கமிஷன் அமைப்பதாகக் கூறியுள்ளது. இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன்மொழிவழி மாநிலங்களை சாதிமத அடிப்படையில் பிளவுபடுத்துவதன்மூலம் தேசிய இனங்கள் உருவாவதை தடுக்க முயற்சிக்கிறது. மொழிவழி மாநிலங்களை உடைத்து சிறு மாநிலங்கள் உருவாக்குவதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் பொம்மை ஆட்சி உருவாக்குவதற்கு எளிமையான வழியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமய தாராளமயக் கொள்கைகள்கிராமப்புறங்களில் வேளாண்மையை சீரழித்து ஓட்டாண்டித்தனத்தை அதிகரிப்பதோடுஅரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளும் சேர்த்துக்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உயர்சாதி ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ஒடுக்குமுறைகளை தொடுத்து வருகின்றனர். எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பண்ணை அடிமை முறைகளைத் திணிக்க நடத்தும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும். மேலும் சாதித்தீண்டாமையை ஒழிப்பதற்கு உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும்ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வது ஒன்றுதான் வழியாகும். மாறாக நிலங்களை பன்னாட்டுஉள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சமி நிலம் மீட்பாலோபொதுத்துறை மற்றும் கல்வியைத் தனியார் மயமாக்கிவிட்டு இட ஒதுக்கீடுசமூக நீதி என்று பேசுவதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டி சமதர்ம சமுதாயத்தை படைக்க முடியாது.
காங்கிரசும்பாஜகவும் புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதில் போட்டி போடுகின்றன. இடதுவலது போலிகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாத அரசியல்கட்சிகள் அனைத்தும் உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கின்ற கட்சிகளே. மேலும் உலகமயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான களமாக பாராளுமன்றம் பயன்படப் போவதில்லை. மாறாக மக்கள் மன்றம் மட்டுமே இத்தகைய போராட்டக் களதின் மையமாக திகழ்கிறது.
எனவே மன்மோகன் கும்பல் புதிய தாராளக்கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும்நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதை எதிர்த்தும்உழவையும்தொழிலையும் பாதுக்காக்கும் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள இம் மே நாளில் அறைகூவி அழைக்கிறோம்.
« அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
« அமெரிக்க ஏகாதிபத்தியமே! ஆப்கான்ஈராக்கை விட்டு வெளியேறு!
« புதிய தாராளமயக் கொள்கை எனும் பெயரால் புதிய காலனியத்தைத் திணிக்கும் மன்மோகன் கும்பலை எதிர்த்துப் போராடுவோம்!
« விவசாயத்துறையை - விளைநிலங்கள்ஆராய்ச்சிவணிகம்கனிவளங்கள் ஆகியவற்றை மான்சாண்டோகார்கில் உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்காதே!
« கனிவளங்கள் மற்றும் மூலவளங்களை பன்னாட்டுஉள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு பழங்குடி மக்கள் மீதும்மாவோயிஸ்டுகள் மீதும் நடத்தும் பாசிச தாக்குதலை உடனே நிறுத்து!
«    பன்னாட்டுஉள்நாட்டு வேளாண் நிறுவனங்களுக்கு - லட்சக்கணக்கான கோடிகள் கடனுதவி!
விவசாயிகளுக்கோ-கந்துவட்டிக் கடனும், பட்டினியும், தற்கொலையுமே!
«    ஏகாதிபத்திய மரபணுமாற்றத் தொழில்நுட்பத்தைத் திணிப்பதற்கான ஒடுக்குமுறைக் கருப்புச் சட்ட மசோதவைத் திரும்பப் பெறு!
«    பன்னாட்டுஉள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஐந்து லட்சம் கோடி - வரிச்சலுகை!
உணவுகல்விமருத்துவம்சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கோ - நிதிக்குறைப்பு!
« நாற்பதாயிரம் கோடி பொதுத்துறைப் பங்குகள் - பன்னாட்டுஉள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்ப்பு!
தொழிலாளருக்கோ - வேலை நேர அதிகரிப்புதொழிற்சங்க உரிமைப் பறிப்புகொத்தடிமை முறைத் திணிப்பு!
«    அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசின் அரைகுறைத் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசுக்குத் துணைபோகும் கருணாநிதி ஆட்சியை எதிர்ப்போம்!
«   நாட்டை புதிய காலனியாக மாற்றுவதையும் தேசிய இனங்களை உடைப்பதையும் எதிர்ப்போம்!
நாட்டின் விடுதலைக்கும்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
«   பஞ்சமி நில மீட்பாலோஇடஒதுக்கீட்டாலோமதமாற்றத்தாலோ சாதி தீண்டாமை ஒழியாது!
«    சாதிதீண்டாமையை ஒழிக்க - மனித உரிமை மறுப்புமத உரிமை மறுப்பை எதிர்த்துப் போராடுவோம்! விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
«    உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!
«    மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல், 2010