Sunday, August 21, 2011

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று! இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

இந்திய அரசே!

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!


சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது.

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 07.06.2011 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை (காவல்துறையினரின் மெத்தனத்தின் காரணமாக) 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப் ஏரியிலிருந்து பிணமாகத்தான் மீட்க முடிந்தது. கைவிரல் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தை அறுத்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே ஏரியில் உடல் வீசப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது போன்றே இக்கொலை நடந்துள்ளது என பார்த்தவர்கள் அனைவரும் கூறுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

தமிழினவிரோத, புதியகாலனியதாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

14வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலை வரும் ஏப்ரல் 13ல் சந்திக்க இருக்கிறோம். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய ஒரு கூட்டணியும்; அ.தி.மு.க தலைமையில் தே.மு.தி.க, ‘இடது’சாரி கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும்; புதியதாக முளைத்துள்ள சாதிவாதக் கட்சிகள் இக்கூட்டணிகளில் சேர்ந்தும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னால், பாட்டாளிவர்க்கமும், பிற ஜனநாயக சக்திகளும் இத்தேர்தலில் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் இன்று நாடு முழுதும் நிலவுகின்ற சூழ்நிலைகளைப் பற்றி ஒரு ஆழமான பரிசீலனை செய்வது மிகவும் அவசியமாகும். நடக்க இருப்பது தமிழக சட்டமன்றத் தேர்தலேயானாலும், நாடு முழுவதற்குமான ஆய்வு அவசியம். ஏனெனில், சோனியா-மன்மோகன் கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் செயல்படுத்திவரும் அதேக் கொள்கைகளையே, கருணாநிதி தலைமையிலான தமிழ்மாநில ஆட்சியும் செயல்படுத்திவந்தது. மேலும் மத்திய அரசு கொள்கைகள்தான் மாநில அரசுகளின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன.