Thursday, August 31, 2017

மோடிஅரசே…! பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறு!!

மோடிஅரசே…! பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவில் “பொருட்கள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. 1947, ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 30 நள்ளிரவில் மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டம் பொருளாதார மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது.