Tuesday, April 30, 2013

பேரணி முழக்கள் முழங்குவோம்!

மே நாள் வாழ்க

மக்கள் ஜனநாயக         இளைஞர் கழகம்
வாழ்க வாழ்க            வாழ்கவே!

மார்க்சிய லெனினிய      மாவொ சிந்தனை
வெல்க வெல்க           வெல்கவே!

மே நாள் வாழ்க         மே நாள் வாழ்க
மேதினி போற்றும்       மே நாள் வாழ்க!

சூளுரைப்போம்          சூளுரைப்போம்
மேதினத்தில்             சூளுரைப்போம்!

மேலாதிக்க              வெறிபிடித்த
அமெரிக்க ஏகாதி         பத்தியத்தின்
புதிய காலனி            ஆதிக்கத்தை
முறியடிப்போம்          முறியடிப்போம்
அமெரிக்காவின்          ஆசிய பசுபிக்
நூற்றாண்டுத்            திட்டத்தை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்!

ஈழத் தமிழருக்கு         எதிரான
அமெரிக்க இந்திய        கூட்டுச் சதிகளை
முறியடிப்போம்          முறியடிப்போம்!

இந்திய                  விரிவாதிக்க கொள்கொகளை
தேசிய இன              ஒடுக்குமுறைக் கொள்கைகளை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்!
ஏகாதிபத்திய             பிடியிலிருந்து
நாடுகளை               விடுதலை செய்யவும்
தேசிய இனங்களின்       சுயநிர்ணய
உரிமைக்காகவும்         போராடுவோம்!

தாய்மொழியை           தமிழ்மொழியை
ஆட்சிமொழி ஆக்கிட     பயிற்றுமொழி ஆக்கிட
போராடுவோம்           போராடுவோம்!
அனைத்து தேசிய        மொழிகளையும்
ஆட்சிமொழி ஆக்கிடப்    போராடுவோம்
தமிழக மக்களின்         நலன் காக்க
மீனவரின் உரிமை       மீட்க
கட்சத்தீவை             மீட்பதற்காக
போராடுவோம்           போராடுவோம்!

பன்னாட்டு               உள்நாட்டு
பகாசூர                  கம்பெனிகள்
கொள்ளை லாபம்        அடிப்பதற்காக
தொழிலாளர்த்            தோழர்களை
கொத்தடிமை             களாக்குவதை
அனுமதியோம்           அனுமதியோம்!
நிரந்தர பணியிட         ஒழிப்பினையும்
ஒப்பந்தக் கூலி           முறையினையும்
வேலை நேர             அதிகரிப்பையும்
எதிர்த்து நின்று           போராடுவோம்!

தொழிலாளி              வர்க்கத்தின்
தொழிற்சங்க             ஜனநாயக
உரிமைகளுக்காகப்        போராடுவோம்!

தற்கொலைக்கு           விவசாயிகளை
தள்ளுகின்ற              நாசகற
புதிய காலனிய           வேளாண் கொள்கைகளை
முறியடிக்க              அணிதிரள்வோம்!
போராடுவோம்           போராடுவோம்
நிலச் சீர்த்திருத்தத்திற்கு போராடுவோம்!



அந்நிய மூலதன         ஆதிக்கத்தாலும்
தொடரும் மின்           வெட்டாலும்
அழியுது பார்             நெசவும், தொழிலும்
அந்நிய மூலதன         வருகையால்
அழியுது பார்             சில்லரை வணிகம்!

காவிரி முல்லை         பெரியாற்றில்
தமிழக உரிமை          பறிபோகுது
அண்டைய மாநிலங்களோ உரிமையை மறுக்குது
மத்திய அரசோ          பாராபட்சம் பார்க்குது
ஆற்று நீரின்             உரிமைக்காக
மத்திய மாநில           அரசுகளை
எதிர்த்துப் போராட        அணிதிரள்வோம்!

ஜெய அரசே             ஜெய அரசே
தமிழக வறட்சித்         திட்டத்திற்கு
போதுமான              நிதியினை
உடனே ஒதுக்கு          உடனே ஒதுக்கு!

சாதிவாத                அரசியலை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்
சாதி, தீண்டாமை         கொடுமைகளை
சவக்குழிக்கு             அனுப்பிடவே
போராடுவோம்           போராடுவோம்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம்          ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Friday, April 26, 2013

மே நாளில் சூளுரைப்போம்


மே நாளில் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள் உக்கிரம் அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள் எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள் இயக்கத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.

Saturday, April 20, 2013

மே நாளில் சூளூரைப்போம்!

மே நாளில் சூளூரைப்போம்!
«  அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் யுத்தவெறிக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
«  நாடுகளின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
«  அமெரிக்காவின் ‘ஆசிய பசிபிக் நூற்றாண்டுத் திட்டத்தை’ எதிர்ப்போம்!
«  ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!
«  இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
«  தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
«  தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!
«  பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
«  தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!
«  புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
«  சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!
«  அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!
«  தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!
«  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!
«  உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
«  மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மே 1, 2013

Sunday, April 14, 2013

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழங்குவோம்!


ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!

ஏகாதிபத்திய அமெரிக்காவின்
ஐ.நா….. தீர்மானம்
ஈழத்தமிழ் மக்களுக்கு
மாபெரும் துரோகம்! மாபெரும் துரோகம்!

அமெரிக்காவின் துரோகத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இன அழிப்பு போர்க்குற்றவாளி
இராஜபட்சே மீதான
சர்வதேச விசாரணை
கோரிக்கைக்கு எதிரான
அமெரிக்க இந்திய கூட்டுச் சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

ஈழத் தமிழரின் சுய நிர்ணய
உரிமைக்கான கோரிக்கை
பேரத்திற்கான ஒன்றல்ல!

தமிழ் ஈழ தனிநாடு ஒன்றே
ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் விடுதலை அடைவதற்கான
ஒரே வழி! ஒரே வழி!
  
தமிழ் ஈழத் தாயகத்தை
சிங்களமய மாக்கிடவும்
இராணுவமய மாக்கிடவும்
இலங்கைக்கு இந்தியா
துணை போவதை முறியடிப்போம்!

தமிழ் ஈழ மண்ணிலிருந்து
சிங்கள இனவெறி இராணுவத்தை
வெளியேற்றப் போராடுவோம்!

ஈழத் தமிழ் மக்களையெல்லாம்
சொந்த மண்ணில் குடியமர்த்த
போராடுவோம்! போராடுவோம்!
உலக மக்கள் ஒன்றுபட்டு
போராடுவோம்! போராடுவோம்!

Sunday, April 7, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம்
ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!

இலங்கைக்கு எதிராக .நா. மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் .நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். “கடந்த ஆண்டு .நா. மனித உரிமைக் கழகம் வலியுறுத்திய தீர்மானத்தின்படி இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் குவித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு பகுதியில் குடியமர்த்தி பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணவேண்டும்என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்ற அடிப்படையில்தான் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!