Wednesday, August 20, 2014

புதியகாலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும் - உலகளாவிய அனுபவங்களும்


நூலினை பெற தொடர்புக்கு
பேசி : 9941611655;
மின் அஞ்சல் :
samaranpublisher@gmail.com;
samaranvelietagam@yahoo.com

உள்ளடக்கம்:

முன்னுரை

இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்வது எது?

வெளியுறவு நெருக்கடிகள்
(External Crisis)

வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கு இடையிலான சமநிலை: அரசியல்- பொருளாதாரப் பின்புலம்

புதிய தாராளமயம் புதிய காலனியச் சார்பு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

பிற்சேர்க்கை
முதலீட்டை விட 10 மடங்கு அதிக சலுகைகள்

முன்னுரை

நான்கு ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கத்துடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனமடையச் செய்வது எதுஎன்ற முதல் கட்டுரையில், நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு அது கடைப்பிடித்த புதியதாராள பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதற்காலப் பகுதியில் அதாவது 2003--2008 ஆண்டுகளின் காலப்பகுதியில் இந்தியா ஒரு உயர் வளர்ச்சியைச் சந்தித்தது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சராசரியாக 9 சதவீதம் என்ற என்றுமே காணாத வளர்ச்சியை எட்டியது. ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டாவது காலப்பகுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்து வெறும் 4.7 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.