Monday, September 5, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலைசெய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரைநிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம். இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.