Sunday, December 13, 2020

சீனா ஒரு ஏகாதிபத்திய நாடா? - என்.பி.டர்னர்

பதிப்புரை

சீனா ஒரு ஏகாதிபத்திய நாடா? என்ற இப்புத்தகம் மிகச் சரியானதொரு நேரத்தில் செந்தளம் கொண்டுவருகிறது.

 உலகில் நிலவும் மூன்று அடிப்படை முரண்பாடுகளும் கூர்மை அடைந்து வருகின்றன. அதாவது கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு; ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்து கொள்ளுவதற்கான முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

 இந்நிலையில் வீழ்ந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எழுச்சியுற்று வரும் சீன-ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் உலகை மறுபங்கீடு செய்து கொள்ளுவதற்கான பனிப்போர் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது.

 தோழர் என்.பி.டர்னர் எழுதியுள்ள இந்நூல் மார்க்சிய- லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் சீனா எப்படி ஒரு முதலாளித்து நாடாக மாறி இன்று ஒரு ஏகாதிபத்திய நாடாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உலகை மறுபங்கீடு செய்துகொள்ள போட்டிபோடும் நாடாக வளர்ந்துள்ளது என்பதை அரசியல் பொருளாதார ரீதியாக விரிவாக ஆய்வு செய்து முன்வைத்துள்ளார். அத்துடன் லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாட்டு காலாவதியாகவில்லை என்பதை பொருளாதார, அரசியல் ரீதியிலும் நடைமுறை அனுபவங்களிலிருந்தும் தனது நிலைப்பாட்டை பின்வருமாறு முன்வைக்கிறது.

 தற்கால சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அளவு மற்றும் அதன் பண்புகள் பற்றியும்;

 சீனாவின் மூலதன ஏற்றுமதி மிகப் பெரும் அளவிலும் மிக வேகமாகவும் ஆப்பிரிக்கா கண்டம் முதல் உலகின் பல பகுதிகளுக்கு செல்லுதல்;

 சீனாவின் அந்நிய முதலிடுகளை காக்க சீனா தனது இராணுவத்தை உலக அளவில் விரிவாக்குதல்;

 சீனாவுக்கும் பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆபத்தான மோதல்கள் வளர்வது;

 போன்ற நிகழ்வு போக்குகளை விறுப்பு வெறுப்பு இன்றி ஆராய்ந்து முன்வைத்துள்ளார். இன்று உலகம் ஒரு கெட்ட போரிடும் நிலைமையை சந்தித்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போர்களால் பல நாடுகள் பல லட்சம் மக்களை பலியிட்டுள்ளது.

 எனவே இன்று உலகம் சந்தித்து வரும் ஆக்கிரமிப்பு போர்களை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் கொண்டுள்ள பனிப்போர் அல்லது நேரடியான போர் எதுவானாலும் சரி இப்போர்கள் குறித்து ஒரு சரியான லெனினிய போர்த்தந்திரங்களையும் செயல்தந்திரங்களயும் வகுப்பதற்கு இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும்.

 பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற (BRICS) பிரிக்ஸ் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் என்றும், அமெரிக்காவை எதிர்த்து உறுதியுடன் போராடி வீரமரணமடைந்த சதாம் உசேன் அவர்களை ஆதரித்தது தவறு என்றும் இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார். இக்கருத்துக்கள் நமக்கு ஏற்புடையதல்ல. சீனா ஏகாதிபத்திய நாடு என்பதை லெனினிய அடிப்படையில் நிறுவுகின்ற காரணத்தால் இந்த நூலை செந்தளம்வெளியிடுகிறது.

 இந்நூலை மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்த தோழர் ஆதிவராகன் அவர்களுக்கும், அச்சாக்கத்திற்கு உதவிய அனைத்து தோழர்களுக்கும் பதிப்பகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

செந்தளம்


 

செந்தளம் வெளியீடுகள் 2

 


Wednesday, July 15, 2020

செந்தளம் ஜூலை வெளியீடு 1




செந்தளம்

# 94/177, திருவல்லிகேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை-600005

செல்: 9600349295 / 8248231600