Wednesday, June 20, 2012

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

சோனியா மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சோனியா மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஜ.மு. கூட்டணியின் மத்திய ஆட்சி, கடந்த மே 24ஆம் தேதி இரவு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி வரலாறு காணாத அளவில் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அத்துடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளையும் உயர்த்த வேண்டும் என்று கூறி எறியும் நெருப்பில் எண்ணெய் வார்த்து வருகிறது. இக்கும்பல் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 40 முறை பெட்ரொல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.