Friday, December 12, 2014

மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!



மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.

   பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள் பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில், கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.

Thursday, December 4, 2014

மருத்துவ, சுகாதார துறைகளை அரசாங்கம் கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!


மருத்துவ, சுகாதார துறைகளை அரசாங்கம் கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!

சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே! தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!


சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே!
தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், புரசாத்ம் ,லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்கள் மூன்று பேரை சேர்த்து ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி பொய்வழக்கு புனைந்து, இலங்கை கடற்படையினர் கைது செய்து, 2011ஆம் ஆண்டு சிறையிலடைத்தனர். மூன்று ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி எட்டு தமிழ் மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிம்னறம் உ த்தரவிட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை முற்றிலும் இரத்துச் செய்து அவர்களை உயிருடன் மீட்டுத்தர வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு இலங்கை அரசு வசமுள்ள 79 விசைப் படகுகள், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் மீட்டுத்தர வேண்உம் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்களின் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. 5 பேர் தூக்கை இரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.