Wednesday, April 20, 2016

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மே நாளில் சூளுரைப்போம்!!



நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மே நாளில் சூளுரைப்போம்!!

ê நாடு எதிர்கொண்டிருக்கும் வேலையின்மை, தொழில்துறை வீழ்ச்சி, வேளாண்மை நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் உலகமய, தனியார்மய கொள்கைகளே!

ê உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடித்தது, ஆக்கிரமிப்புப் போர்களும், பாசிசமுமே!

ê பொருளாதார மீட்சிக்கும் வேலை வாய்ப்பு பெருக்கவும் வேளாண்மை நெருக்கடியிலிருந்து மீளவும், அந்நிய மூலதனத்தை சார்ந்த மோடி அரசின்மேக் இன் இந்தியாதிட்டம் தீர்வல்ல!

ê ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இந்துத்துவ பாசிச கொள்கைகளை முறியடிக்க புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்துக்காகப் போராடுவோம்!

ê ஆளும் வர்க்கக் கட்சிகள், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் மூலமே நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்று உருவாக்கும் மாயையை முறியடிப்போம்!

ê அடிப்படைப் பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டு ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு முழக்கங்களை முன்நிறுத்துவது மோசடியே!

ê தமிழக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

ê உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு