Sunday, April 7, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம்
ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!

இலங்கைக்கு எதிராக .நா. மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் .நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். “கடந்த ஆண்டு .நா. மனித உரிமைக் கழகம் வலியுறுத்திய தீர்மானத்தின்படி இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் குவித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு பகுதியில் குடியமர்த்தி பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணவேண்டும்என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்ற அடிப்படையில்தான் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!