Thursday, February 4, 2016

விவசாய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகப் போராடுவோம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின்
மறுவாழ்வுக்காகப் போராடுவோம்!

  • இந்திய அரசே! தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவி!

  • விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகப்படுத்து! இழப்பிற்கு ஏற்றவாறு நிவாரணம்கொடு!

  • கோவில், மடங்கள்,நிலப்பிரபுக்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு குத்தகை, வாரத்தை ரத்துசெய்! கந்துவட்டியை ஒழி! விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கு!

  • வேலையற்றோர் மற்றும் ஏழை எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கு!

  • வீடற்றவர்கள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு கல்வீடுகள் கட்டிக்கொடு!

  • ரியல் எஸ்டேட்,மணல்,கிரானைட்,கல்விக் கொள்ளையர்களின் ஆறு,ஏரி,குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்று! அரசுடைமையாக்கு!

  • வெள்ளம், வறட்சிப் பேரிடர்களிலிருந்து மீள நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்து!

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு! வட்டியில்லாக் கடன் வழங்கு! ஆன்லைன் வர்த்தகத்தைத் தடைசெய்!

  • மக்களின் மறுவாழ்வுக்காகவும், நதிநீர் இணைப்பு திட்டத்திற்காகவும்நிதி உத்திரவாதம் செய்ய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை!    கருப்புப் பணத்தைக் கைப்பற்று!

  • பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தொகை, வரிச் சலுகையை ரத்துச்செய்! அவர்கள் மீது வெள்ளநிவாரண வரிப்போடு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு



No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.