Friday, March 7, 2014

இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!



இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
     உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், குற்ற விசாரணை சட்டத்தின்படி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி மாநில அரசே முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
   உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி இம்மூவரையும் விடுதலை செய்வதுடன், இவ்வழக்கில் ஏற்கனவே ஆயுள்தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடிவு எடுத்தது. அது பற்றி மத்திய அரசின் முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்கவேண்டும், இல்லையேல் தமிழக அரசு இவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்யும் என்று அறிவித்தது.

Wednesday, February 12, 2014

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

ê அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய அரசியல், பொருளாதார கொள்கைகளை முறியடிப்போம்!
ê நாட்டை அரசியல் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
ê அந்நிய மூலதன ஆதிக்கத்திற்குச் சேவைசெய்யும் காங்கிரஸ் கும்பலின் பெருந்தேசியவாத, விரிவாதிக்கவாதப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê வளர்ச்சி என்ற பெயரால் புதிய காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் “கார்ப்பரேட் மோடி”யின் இந்துத்துவப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியும் அந்நிய ஆதிக்கத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை செய்யும் “காளான்”களே!
ê பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊழலை எதிர்க்காமல் ஊழல் ஒழிப்பு நாடகமாடும் ஆம் ஆத்மியையும் தொண்டு நிறுவனங்களையும் தனிமைப்படுத்துவோம்!

êஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ பாசிச பா.ஜ.க.வுக்கு துணைபோவும் தமிழ் உணர்வாளர்களின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியை முறியடிப்போம்!
ê பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் உடைமைகளை பறிமுதல் செய்யப் போராடுவோம்!
ê வேளாண்துறையை கார்ப்பரேட் மயமாக்கி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கும் தேசவிரோதக் கொள்கைகளை முறியடிப்போம்!

  •       நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
ê நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமைக் கொடுமைகளை சவக்குழிக்கு அனுப்புவோம்!
ê தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்! தாய்த்தமிழை ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்கப் போராடுவோம்!
ê கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!
ê புதிய காலனியப் பொருளாதாரக் கொள்கைகளைக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!
ê மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
 மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு


Wednesday, November 6, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடுத்துவது எதிர்த்து...



நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!


நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 

தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது, வன்னியச் சாதி வெறியர்கள் சாதி கலவரத்தை நடத்தி நாசப்படுத்தியது வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் ஓராண்டு காலம் முடிவடைகிறது. கலவரம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது முறையாக நடக்கவுமில்லை, அம்மக்களைச் சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவுமில்லை. சாதிக் கலவரத்தைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பேரில் ஓராண்டு காலமாகத் தர்மபுரியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள 144-தடை சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் அடக்குமுறைகளை ஏவி ஒரு போலீஸ் இராஜ்ஜியமே நடந்து வருகிறது. 

Tuesday, October 22, 2013

இலங்கையில் “காமன்வெல்த் மாநாடு” நடத்துவதை எதிர்த்து ...

ஏகாதிபத்தியவாதிகளே!
  • இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான “காமன்வெல்த் மாநாட்டைஇலங்கையில் நடத்தாதீர்!
  • இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
  • தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காகப் போராடுவோம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மூலம் ஜனநாயகம் வழங்குதல் என்ற கபட நாடகத்தின் பின்னால் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கிறது.தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன் மீதான இன அழிப்புப் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது. வரலாறு காணாத இராணுவ மயமாக்கலின் கீழ் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இராஜபட்சேவின் கைக்கூலி விக்னேஸ்வரன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈழத் தமிழினத்தை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகம் என்பதைக் கூட ஏற்காத, காவல், நிலம் போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு மாகாண சபையால் எள்முனை அளவுக்குக் கூட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. மாறாக, இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு மௌன சாட்சியாகவே வடக்கு மாகாண ஆட்சி அமையும்.

Tuesday, September 24, 2013

இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!


இந்திய அரசே!
ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான
13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல்
மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

      சிங்கள இனவெறியன், இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல், இலங்கையில் போர்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்தப் பிறகும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண மறுத்துவருகிறது. ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போது திடீரென்று 13வது சட்டத்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, வடக்குமாகாணத் தேர்தலை நடத்தி ஜனநாயகம் வழங்குவது என்ற பேரில் ஈழத்தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறையை மூடி மறைப்பதுடன், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன்னை இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.


      அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐ.நா. மனித உரிமை கமிஷ்னர் நவனீதம் பிள்ளை, தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பற்றியும்; போர் முடிந்தப் பிறகும் கூட அங்கு ஜனநாயகத்தின் குரல் நெறிக்கப்படுவது குறித்தும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் பத்திரிக்கையாளர் உட்பட காணமல் போவது தொடர்வது பற்றியும்; சிங்கள இனவெறி பாசிச ஆட்சியின் கொடூரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மூடிமறைத்து காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைக்கும் கபட நாடகங்களுக்குத் துணைபோகிறது.

விரிவாக படிக்க ... http://senthalamsamaran.blogspot.in/2013/09/13.html

Monday, September 23, 2013

அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!


அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!

      மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.


      இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத் திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.

விரிவாக படிக்க....  http://senthalamsamaran.blogspot.in/2013/09/blog-post.html

Saturday, September 21, 2013

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!!

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்!
ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

       ஜெயலலிதா அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144 தடை நியாயப் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள் மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில் தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.

       சாதி ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144 தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் ம்என்றால் சிறைவாசம், “ஏன்என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.

Tuesday, August 27, 2013

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!
«  அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் சோனியா-மன்மோகன் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

«  இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்கும் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல், மோசடிகளை மூடி மறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

«  தமிழக அரசே! ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில பயிற்றுமொழித் திணிப்பைக் கைவிடு!

«    தமிழை ஆட்சிமொழி பயிற்றுமொழி ஆக்கப் போராடுவோம்!

«  அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!


« சாதிவெறிப் பிற்போக்கு முன்னணியை முறியடிப்போம், தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபடுவோம்!



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு