Wednesday, March 20, 2013


இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட் சேவைக் கூண்டிலேற்றவும், தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்புக்கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!
.நா சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா ஒரு உப்பு சப்பில்லாத தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அந்தத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான "டெசோ'' அமைப்பினரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை நிர்பந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் போராடும் பெரும்பான்மை மாணவர்கள் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வெறும் நாடகம் என்றும் இலங்கையில் சர்வதேச விசாரணை வேண்டியும் தமிழீழ தனிநாடு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கானத் தீர்மானத்தை இந்தியா தனியாக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகின்றனர். இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழரின் விடுதலைக்கான ஒரு சரியான நிலைபாட்டை எடுக்கவும், மாணவர்களின் போராட்டத்தை ஒரு பொது இயக்கமாக மாற்றுவதற்கும் மேற்கண்ட போக்குகளை பற்றி ஒரு பரிசீலனை செய்வது அவசியமாகும்.

Sunday, March 17, 2013

இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!


இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!

«  அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் – மேலாதிக்கம் நோக்கம் கொண்டதே, இராஜபட்சேவை கூண்டிலேற்றவும் அல்ல, ஈழத்தமிழர்களின் விடுதலைக்கானதும் அல்ல!
«  இலங்கையை – அமெரிக்கா, சீனா மேலாதிக்கவாதிகளின் போட்டிக்களமாக மாற்றுவதை அனுமதியோம்!
«  சோனியா, மன்மோகன் ஆட்சி – இன அழிப்பைத் தொடரும் இராஜபட்சேவின் கூட்டாளியே! போர்க்குற்றவாளிகளே!
«  கருணாநிதியின் டெசோ - அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தர இந்தியாவை நிர்ப்பந்திப்பது – தமிழின துரோகத்தின் தொடர்ச்சியே!
«  இரட்டை வேட ஜெயா அரசே! மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை கைவிடு!
«  தமிழீழத்திற்கான மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, February 10, 2013

இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியைமுறியடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
      தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒரு சாதிவெறித் தாக்குதலை நடத்தி முடித்தனர். முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொளுத்தினர். வன்னியச் சாதியைச் சார்ந்த ஒரு பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கலப்புமணம் புரிந்துகொண்டதைக் காரணம் காட்டி இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.
      கடந்த நவம்பர் 7ல், தருமபுரியில் நடந்த அந்தக் கலவரம் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை வன்னியச் சாதிவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தாழ்த்தப்பட்டச் சாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

Friday, January 25, 2013

அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கமும் “அரபு வசந்தமும்”


சமரன் வெளியீட்டகம் : தொடர்புக்கு: 9941611655

முன்னுரை
                அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.

Monday, January 21, 2013

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!

«  கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!
«  சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!
«  சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!
«  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2013

Friday, January 4, 2013

கூடங்குளம் அணு உலையைத் திற! - ஆர்ப்பாட்டம்


கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

          கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதானத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது.

Monday, November 26, 2012

தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!

தருமபுரி அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.

Sunday, November 11, 2012

சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்.



தர்மபுரியில்... சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


«  காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!
«   தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய பா.ம.க வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடு!
«  தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவோம்!
«  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு

Thursday, October 4, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!
       அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின் மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Thursday, September 20, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!


முழு புத்தகத்தையும் படிப்பதற்கு கீழே சொடுக்கவும்
http://senthalamsamaran.blogspot.in/2012/09/80.html

புத்தகம் வேண்டுவோர்:

விலை             :   ரூ. 30 /-

முதற்பதிப்பு : ஆகஸ்ட், 2012
நூல் கிடைக்கும் இடங்கள்:
தோழர் டேவிட் செல்லப்பா
3/20, அண்ணா தெரு, மேட்டுக்குப்பம்,
வானகரம், சென்னை - 600098
பேசி : 8098538384
------------------------------------------------------------
சமரன் வெளியீட்டகம்,
28/141, மாதவரம் நெடுஞ்சாலை,
பெரம்பூர், சென்னை-600011
செல்: 9941611655
Samaranpublisher@gmail.com
Samaranvelietagam@yahoo.com